Connect with us

உள்நாட்டு செய்தி

நாளை (16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல்

Published

on

நாளை (16) முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான சுகாதார வழிகாட்டல் கோவை சுகதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்று (15) வௌியிடப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகளின் பிரகாரம்,

தகுதி வாய்ந்த அதிகாரியின் அனுமதியின்றி மறு அறிவித்தல் வழங்கப்படும் வரை பொது மக்கள் ஒன்றுகூடுல், கூட்டங்கள் மற்றும் விழாக்கள் என்பனவற்றுக்கு அனுமதியில்லை

அதற்கமைய, தனிப்பட்ட கூட்டங்களின் போது மண்டபமொன்றில் மூன்றில் ஒரு பங்கினருக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள அதேவேளை அந்த எண்ணிக்கை 100 ஐ தாண்டக்கூடாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர் ஒருவரின் வீட்டில் ஒன்றுகூடுவதாக இருந்தால் 10 பேருக்கு மாத்திரமே அனுமதி

வௌியிடங்களில் தனியார் ஒன்றுகூட அனுமதி இல்லை

புதிய சுகாதார வழிகாட்டல் கோவைக்கு அமைய செயற்படாத நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்களில் தனித்தனியாக வழிபாடுகளில் ஈடுபட அனுமதி

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு அமைவாகவே விசேட நிகழ்வுகள், பிரார்த்தனைகள் என்பன நடத்தப்பட வேண்டும்

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர் தர வகுப்புகளுக்காக மாத்திரம் மேலதிக வகுப்புகள் 50 வீதமானவர்களின் பங்குபற்றலுடன் நடத்தப்பட வேண்டும்.

திருமண நிகழ்வுகளில் நூற்றுக்கும் மேற்படாதவர்கள் கலந்துகொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதுடன் மதுபான பாவனைக்கு அனுமதியில்லை

பார்வையாளர்கள் இன்றி விளையாட்டு போட்டிகளை நடத்த அனுமதி

திரையரங்குகளில் 50 வீதமானோருக்கு அனுமதி

உள்ளிட்ட வழிகாட்டல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *