Connect with us

உள்நாட்டு செய்தி

இராதாகிருஸ்ணன் சுமத்தும் குற்றச்சாட்டு

Published

on

அரசாங்கம் மக்களை ஏமாற்றி அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

ஹட்டனில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.
சிறிமாவே பண்டாரநாயக்காவின் ஆட்சியில் மக்கள் பொருட்கள் தட்டுப்பாட்டை எதிர்கொண்டது போல் இன்றைய நிலை மாறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தருவதாக கூறிய 1000 ரூபா சம்பள உயர்வும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.