Connect with us

உள்நாட்டு செய்தி

ராகலை தீ விபத்து, ஒருவர் கைது

Published

on

ராகலை இலக்கம் 01 தோட்ட பிரிவில் நேற்று (07) இரவு இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரின் பிரேத பரிசோதனைகள் நுவரெலியா பொது வைத்தியசாலையில் இடம்பெறவுள்ளது.

சடலங்கள் இன்று பிற்பகல் நவரெலியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை ராகல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தடயவியல் அறிக்கையை பெற்று நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

முதலாவது பிறந்தநாளை நேற்று (07) கொண்டாடிய மோகன் நிரோஷன், 11 வயதான அவரது சகோதரன், 34 வயதான தாய், 60 மற்றும் 55 வயதான தாயின் பெற்றோர் என ஐவர் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிள்ளையின் தந்தை தனியாக வசிப்பதுடன் சம்பவம் இடம்பெற்ற வேளையிலும் வீட்டில் இருக்கவில்லை.

வீடு தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *