Connect with us

Sports

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை வீணடித்து விட்டோம்: குசல்

Published

on

இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரில் கலந்து கொண்டுள்ள இலங்கை வீரர்கள் சிலர் இங்கிலாந்தின் ´´டிரம்´´ பிரதேசத்தில் சுற்றித் திரிந்ததாக குற்றம் சுமத்தப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக கருத்து கூற விரும்பவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இணையவழியாக நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த குசல்…

“நாம் தோல்வி அடையும் விதம் குறித்து ரசிகர்கள் கவலையில் உள்ளதை நான் அறிவேன். எனினும் எமக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிலையிலும் வாழ்த்தப்படுவதில் மகிழ்ச்சி. அவர்களின் எதிர்ப்பார்ப்பை நாம் வீணடித்து உள்ளோம். இதற்காக எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இது தொடர்பில் உண்மையில் தலைவர் என்ற முறையில் நான் மன்னிப்பை கோருகின்றேன். இவ்வாறான ரசிகர்களை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இவற்றை எல்லாம் திருத்திக் கொண்டு போட்டியில் வெற்றிப்பெறுவதுதான் எனது எதிர்ப்பார்ப்பு.” என்றார்.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *