Connect with us

Sports

இங்கிலாந்து செல்ல இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் இணக்கம்

Published

on

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் வருடாந்த ஒப்பந்தம் தொடர்பில் இதுவரை சிறிலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் முடிந்த பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் இரு தரப்பினரும் கலந்துரையாடி முடிவு காண்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

3 ஒரு நாள் போட்டிகளிலும் 3 T20 போட்டிகளிலும் விளையாட இலங்கையணி நாளை (08) அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணிக்கவுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *