Connect with us

Sports

முரளி நலமாகவுள்ளார்

Published

on


இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு குருதி குழாய் சீரமைப்பு சிகிக்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முரளி சென்னையிலுள்ள வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு குருதிகுழாய் அடைப்பு ஏற்பட்டமை கடந்த மார்ச் மாத இறுதியில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் முன்னர் திட்டமிட்ட வகையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும் சென்னை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் இடம்பெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் முரளிதரன் சன்ரைஸஸ் ஹைத்ராபாத் அணியின் சுழல் பந்து வீச்சு ஆலோசனையாளராக செயற்படுகின்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *