Connect with us

உள்நாட்டு செய்தி

24 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்.

Published

on


ஜேர்மன் மற்றும் சுவிட்ஸர்லாந்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 24 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


குடிவரவு குடியகல்வு சட்டவிதிமுறைகளை மீறி ஜேர்மனியில் இருந்து 20 பேரும் சுவிட்ஸர்லாந்தில் இருந்து நால்வரும் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.


இவர்களில் பெண் ஒருவரும் அடங்குவதுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்கள் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தல் நிறைவுபெற்ற உடன் சட்டரீதியான விசாரணைகளுக்காக குற்றபுலனாய்வு திணைக்களம் மற்றும் தேசிய புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *