Connect with us

உள்நாட்டு செய்தி

யார் என்ன திட்டம் தீட்டினாலும் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் – ஜீவன்

Published

on


ஆயிரம் ரூபா சம்பளம் விவகாரம் குறித்து 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் ஆயிரம் ரூபா கிடைக்கும் என்பது உறுதி என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

கம்பனிகள் என்ன திட்டம் தீட்டினாலும் ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொடுத்து தொழிலாளர்களையும் பாதுகாப்பதாக தெரிவித்துள்ளார்.

சௌமிய மூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் பிரஜா சக்தி செற்றிட்டத்திற்கு 15 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு டிக்கோயா வனராஜா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

15 வருட பூர்த்தியை முன்னிட்டு இணையதளம் ஒன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரஜா சக்தி செயல்த்திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி பரத் அருள்சாமி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *