Connect with us

உலகம்

ப்ளொய்ட் வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழு

Published

on

கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிபதிகள் குழுவில் 12 உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரியான டெரெக் சாவினை விசாரணை செய்வதற்காக முதல் தடவையாக நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

44 வயதுடைய குறித்த அதிகாரி கடந்த வருடம் மே 25ம் திகதி ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் கழுத்தை தனது கால்களால் நெரித்து கொலை செய்திருந்தார்.

இந்த குற்றம் நிரூபனமானால் அவருக்கு 40 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜோர்ஜ் ப்ளொய்டின் கொலை சர்வதேசத்தின் கண்டனத்திற்கு உட்பட்டதுடன் பல நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.