Connect with us

உள்நாட்டு செய்தி

அடுத்த வாரம் இலங்கை வரும் பசில் ராஜபக்ஷ

Published

on

 

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளராக பசில் ராஜபக்ஷ களமிறங்குவார் என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு பசில் ராஜபக்ச அடுத்த வாரம் அமெரிக்காவில் இருந்து வரவுள்ளதாக ராஜபக்ச குடும்பத்தின் நெருங்கிய உறவினர் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை அல்ல பாராளுமன்ற தேர்தலே முதலில் நடத்தப்படும் என நம்புவதாக தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதி பசில் ராஜபக்ச இலங்கை வரும் போது அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்படும் என்றும், வாகன அணிவகுப்பு அவரை கொழும்புக்கு அழைத்து வரும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *