Connect with us

உள்நாட்டு செய்தி

யாழில் பாடசாலை மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்: வடக்கு ஆளுநர் அதிரடி!

Published

on

அண்மையில் யாழ்ப்பாணம் – நெல்லியடியில் உள்ள பாடசாலையொன்றில் தரம் 06 இல் இணைந்து கொண்ட புதிய மாணவன் மீது, தரம் 10 பயிலும் மாணவன் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் வழங்கிய பணிப்புரை வழங்கியிருந்தார்.

இவ் விடயம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்குமாறு பாடசாலை அதிபர் மற்றும் வலயக்கல்வி பணிமனைக்கு ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படும் அபயம் பிரிவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் மாணவன் ஆகியோரிடம் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக நெல்லியடி மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *