Connect with us

உள்நாட்டு செய்தி

உடல் சிதைவடைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

Published

on

  

அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த பெண்ணை பல நாட்களாக காணவில்லை எனவும் அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அஹுங்கல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அதன்படி, நேற்று (19) பொலிஸார் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் போது, ​​குறித்தப்பேன் பெண் வீட்டினுள் நாற்காலியில் உற்கார்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார் .
உடல் மிகவும் சிதைந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.அஹுங்கல்ல, எகொடமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *