Connect with us

உள்நாட்டு செய்தி

அரச வங்கிகள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்பு

Published

on

அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவன பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிறுவனங்களின் மறுசீரமைப்பு, மாற்று முன்மொழிவுகள், நிறுவனங்களை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் தொடர்பான பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

ஏதேனும் பிரச்சினைகள் மற்றும் மாற்றங்கள் தொடர்பான கருத்துக்கள் இருப்பின் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுக்காமல் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *