Connect with us

உள்நாட்டு செய்தி

விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபாய் வரவு-மஹிந்த அமரவீர  

Published

on

 

எதிர்வரும் பெரும்போக நெற்பயிர் செய்கைக்கான உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், மேலும் 450 மில்லியன் ரூபாவை இன்றைய தினம் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *