Connect with us

உள்நாட்டு செய்தி

கிராண்ட்பாஸ் துப்பாக்கி சூடு: இரு இளைஞர்கள் கைது

Published

on

கடந்த வருடம் டிசம்பர் மாதம் கிராண்ட்பாஸ், சேதவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி கிராண்ட்பாஸ் சேதவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகள் மற்றுமொரு நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலியானவர் கொல்லப்பட்டார்.

கொழும்பு குற்றப்பிரிவு (CCD) மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர், சனிக்கிழமை (ஜனவரி 27) கொழும்பு பெர்குசன் வீதியில் மோட்டார் சைக்கிளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கம்புருபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற போது மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடப்பட்டதாகவும், சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்டதாகவும் அவர் மேலும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, சந்தேக நபர்களுக்கு துப்பாக்கியை வழங்கி துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயுதம் வைத்திருந்தமைக்காக வெல்லம்பிட்டிய வெலேவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் இருந்து கைத்துப்பாக்கி ரக துப்பாக்கி, மகசீன், மூன்று துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் கைத்தொலைபேசி என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சிசிடி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *