Connect with us

உள்நாட்டு செய்தி

போக்குவரத்து கட்டணங்களை தீர்மானிக்கும் அதிகாரத்தில் மாற்றம்

Published

on

போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த சட்டத்தை மாற்றுவதற்கு உரிய ஆவணங்கள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இன்று (02.01.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

புகையிரத, முச்சக்கர வண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவைக் கட்டணங்கள் உட்பட அனைத்தும் இதற்குள் உள்வாங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, போக்குவரத்துத் துறை தொடர்பான கட்டணங்கள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு அமைச்சரவை பத்திரம் ஒன்றை நேற்று வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்மூலம் நியாயமான விலைக் கொள்கையை அங்கு உருவாக்க முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *