உள்நாட்டு செய்தி
இலங்கை வந்த சீன பிரஜைக்கு நேர்ந்த கதி
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/02/download-2023-02-27T144226.637.jpg)
பயாகல கடலில் சீன பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு காணாமல்போன நபர் 54 வயதான Zhang Xiaolong என்ற சீன பிரஜை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன சீன பிரஜை, பயாகல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு காணாமல்போன நபரை பிரதேசவாசிகள் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடி வருகின்றனர்.
இருப்பினும், நேற்று (21) பிற்பகல் வரை அவரை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.