Connect with us

உள்நாட்டு செய்தி

பேருந்து தொடர்பான முக்கிய அறிவிப்பு..!

Published

on

கொழும்பு பிரதேசத்தில் பேருந்து முன்னுரிமை ஒழுங்கு சட்டத்தை இன்று (02) முதல் நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதை முன்னோடி திட்டமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பஸ் முன்னுரிமைப் பாதை திட்டம் இன்று (02) முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து காலி வீதி, கொழும்பு கோட்டை வரை காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும், மருதானை வீதி பொரளை சந்தியிலிருந்து கோட்டை ஒல்கெட் மாவத்தை வரையிலும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை இந்த முன்னோடி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாதையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள், தனியார் பேருந்துகள், பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக ஊழியர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள், பேருந்துகள் மாத்திரமே பயணிக்க அனுமதிக்கப்படும்.மேற்குறிப்பிட்ட நேரத்தில் இந்த பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *