Connect with us

உள்நாட்டு செய்தி

சிறுவர் வைத்தியசாலையில் திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் கைது !

Published

on

தமது பிள்ளை மூலம் பணம் மற்றும் கைப்பேசிகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்களின் கைப்பேசிகள் மற்றும் பணம் இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் பொது இடங்களில் தமது பிள்ளையை பயன்படுத்தி நீண்டகாலம் திருட்டில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *