Uncategorized
சாரதி உரிமம் அச்சிடுதல் பொறுப்பு மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைப்பு
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2022/12/a8485782-8ab92371-driving-license_850x460_acf_cropped.jpg)
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட ஒன்லைன் முறையின் ஊடாக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதை,
மோட்டார் வாகன திணைக்களத்திடம் ஒப்படைக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.
09 ஜூலை 2020 அன்று எடுக்கப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தின்படி, 2021 ஜனவரி 01 முதல் இலங்கை இராணுவம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி, 10 லட்சத்து 22,763 சாரதி உரிமங்களும், 24 லட்சத்து 34,467 தற்காலிக சாரதி உரிமங்களும் அச்சடிக்கப்பட்டிருந்தன.