Connect with us

உள்நாட்டு செய்தி

ஆமைகளின் இறப்பிற்கான காரணத்தை சரியாக இனங்காண முடியாத நிலை – நிபுணர்கள்

Published

on

   சமீபத்தில் பல்வேறு கடற்கரையோரங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய ஆமைகளின் இறப்பிற்கு என்ன காரணம் என்பதை நிபுணர்களால் சரியாக அடையாளம் காண முடியவில்லை.வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரியொருவரின் கூற்றுப்படி, புத்தளம் முதல் களுத்துறை வரையிலான கடற்கரையில் சுமார் மூன்று வாரங்களுக்குள் சுமார் 50 ஆமைகளின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.புத்தளம், கபுங்கொட, பமுனுகம, முத்துராஜவெல சதுப்பு நிலம், இந்துருவ மற்றும் டெல்ஃப்ட் தீவு ஆகிய கடற்பகுதிகளில் இருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்த சூழ்நிலையில், வனவிலங்கு திணைக்களம் பல ஆமைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணையைத் தொடங்கியது.இருப்பினும், நீருக்கடியில் வெடிப்பு ஏற்பட்ட நிலையில் ஆமைகள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்நிலையில், உயிரிழந்த ஆமைகளின் பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு விரிவான அறிக்கையை வழங்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதேவேளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (NARA) இறந்த அனைத்து ஆமைகளும் ஒரே அளவு மற்றும் ஒரே இனத்தைச் சேர்ந்தவை என வெளிப்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *