Connect with us

உள்நாட்டு செய்தி

கேகாலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயம்

Published

on

 

கேகாலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (03.09.2023) காலை கேகாலை, மாவனெல்லை – எருவ்பொல வீதியின் எத்தமிட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்த இளைஞர் அரநாயக்க லீலாகம பகுதியைச் சேர்ந்த 18 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில்  தெரியவந்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *