உள்நாட்டு செய்தி
வலம்புரி சங்குடன் அறுவர் கைது !

ஜா – எல பகுதியில் அதிக பெறுமதியுடைய வலம்புரி சங்குடன் இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.14 அங்குலம் நீளமான வலம்புரி சங்கை 56 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய தயாராகவிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் பயணித்த கெப் வாகனம் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கிரிந்திவெல, நிட்டம்புவ, அங்கொடை, மாளிகாகந்தை பகுதிகளைச் சேர்ந்த 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.