Connect with us

உள்நாட்டு செய்தி

மாந்தை கிழக்கு பகுதியில் வயோதிபரின் சடலம்

Published

on

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பகுதியில் வயோதிபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு மூன்று முறிப்பு பகுதியில் நேற்று(04) மாலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலம் வயல்வெளி வீதி ஓரத்தில் அடையாளம் காணப்பட்டிருந்தது

வவுனியா – முள்ளிக்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கால்நடைகளை மேய்ப்பதற்காக சென்றவர்களினால் குறித்த சடலம் அடையாளம் காணப்பட்ட நிலையில் நட்டாங்கண்டல் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *