Connect with us

உள்நாட்டு செய்தி

ஆங்கில மொழிக் கல்வி

Published

on

பாடசாலைகளில் தரம் ஒன்றில் அனைத்து மாணவர்களுக்கும் ஆங்கில மொழியை பிரயோகிப்பதற்காக 13, 800 ஆசிரியர்கள் தமது பயிற்சியை பூர்த்தி செய்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த தெரிவித்தார்.

கங்கொடவில சமுத்திரா தேவி பாலிகா கனிஷ்ட வித்தியாலயத்தில் நேற்று (30) இடம்பெற்ற தரம் ஒன்று மாணவர்களுக்காக ஆங்கில மொழிப் பிரயோகத்தை ஆரம்பிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதுதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

சவால்களை பொறுப்பேற்பதற்கு தயாராக உள்ள எதிர்கால மாணவர் பரம்பரையை உருவாக்கும் ஆசிரியர் குழாத்தின் பொறுப்பை நிறைவேற்றுவதற்காக, இணை மொழியாக அத்தியாவசியமான ஆங்கில மொழியை தரம் ஒன்றில் சகல பிள்ளைகளும் பயன்படுத்துத்தும் திட்டம், ஆரம்பமாகிறது என்று  அமைச்சர் குறிப்பிட்டார்.

தொழில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு, முன்னனுபவத்துடன் தொடர்ந்தும் வினைத்திறனாக செயற்பட முடியாது. தற்கால அறிவிற்கு இடையே நாளை நிகழ்வதை இன்று தெரிந்து கொள்வதன் ஊடாக, இந்நாட்டில் எதிர்கால தொழிற்துறைக்கு பயனுள்ள கல்வியை வழங்கும் பொது இணை மொழி என்ற ரீதியில் ஆங்கில மொழியை, மாணவர்கள் அவர்களது பாடசாலைக்கு சேரும் முதல் நாளில் இருந்தே பதட்டமின்றி, நடைமுறைப் பயிற்சியை வழங்குவதே தனது எதிர்பார்ப்பு என்றும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

சில பாடசாலைகளில் ஆங்கில மொழிக் கல்வி 1962 ஆம் ஆண்டின் பின்னர் செயற்பாட்டில் இல்லாதிருந்ததுடன் 2000ஆம் ஆண்டின் பின்னர் குறிப்பிட்ட அளவில் க.பொ.த. உயர் தரத்தில் ஆங்கில மொழியில் கற்பித்தல் ஆரம்பமானதுடன் தற்போது தரம் ஆறிற்கு மேல் சுமார் 550 பாடசாலைகளில் அதிகமான மாணவர்கள் ஆங்கில மொழியில் விஞ்ஞானம், வர்த்தகம் மற்றும் காலை பிரிவுகளில் கல்வி கற்பதாகவும் அவர் மேலும்  குறிப்பிட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *