Connect with us

உள்நாட்டு செய்தி

இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம்

Published

on

29 இலட்சம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் வேலைத்திட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (26) கொழும்பு மாவட்டத்தில் ஆரம்பமானது.

திம்பிரிகசாய பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெமட்டகொட, நாரஹேன்பிட்டி மற்றும் வெள்ளவத்தை ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இதன்படி, தெமட்டகொட, மிஹிதுசென்புர சனசமூக மண்டபத்தில் 995 பயனாளிகளுக்கும், நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தை சனசமூக மண்டபத்தில் 448 பயனாளிகளுக்கும், வெள்ளவத்தை ரஞ்சன் விஜேரத்னபுர சனசமூக மண்டபத்தில் 169 பயனாளிகளுக்கும் அரிசிப் பொதிகள் வழங்கப்பட்டன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *