Connect with us

உள்நாட்டு செய்தி

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு

Published

on

நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு, இலங்கையில் நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுகளை வழங்குவது தொடர்பில் இந்த குழு செயற்படுகிறது.

இலங்கையின் நிர்மாணத்துறையின் பிரச்சினைகளை முறையாகத் தீர்த்து, அதற்கு புத்துயிரளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

நிர்மாணத்துறைக்கு புத்துயிரளிக்கும் குழுவின் கீழ் நிறுவப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள நிறைவேற்றுக் குழுவின் மூலம் நிர்மாணத்துறைக்கு புத்துயிர் வழங்கப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *