Connect with us

உள்நாட்டு செய்தி

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

Published

on

கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதன்படி கிரான்பாஸ், மாளிகாவத்தை மற்றும் தெமட்டகொடை ஆகிய பொலிஸ் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

கொவிட் 19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்ததாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், கம்பஹா மாவட்டத்திற்கு உட்பட்ட வத்தளைப் பொலிஸ் பிரிவின் வெலிகடமுல்ல கிராமசேவையாளர் பிரிவும் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளது.

மேலும், கிரிபத்கொடைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹுனுப்பிட்டிய வடக்கு கிராம சேவையாளர் பிரிவு மற்றும் நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்துவ MC வீடமைப்புத் திட்டமும் நாளை காலை ஐந்து மணி முதல் தனிமைப்பத்தலில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இதேவேளை, பொரள்ளைப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோத்தமிபுர வீட்டுத் திட்டத்தின் 24 மற்றும் 78 ஆகிய தோட்டப் பிரிவுகள், நாளை காலை ஐந்து மணி முதல் புதிதாக தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா மேலும் அறிவித்துள்ளார்.