Connect with us

Sports

அரையிறுதியில் …

Published

on

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவு பெற்றன.

இதில் குரூப் 1ல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2ல் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் லீக் சுற்று கடைசி போட்டியில் இந்தியா, சிம்பாப்வே அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அதன்படி 128 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சிம்பாப்வே அணி 17.2 ஓவர் நிறைவில் 115 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்து போட்டியில் தோல்வியடைந்துள்ளது.

அதனடிப்படையில் அரையிறுதி போட்டியில் இந்திய அணி எதிர்வரும் 10 ஆம் திகதி இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 9 ஆம் திகதி நியுஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.