Connect with us

உள்நாட்டு செய்தி

ஜனாதிபதி பதவி விலகல் கடிதத்தை அனுப்பியதாக தகவல்?

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரை சென்றடைந்த ஜனாதிபதி மேற்குறித்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனிப்பட்ட விஜயம் ஒன்றிற்காக நாட்டிற்கு வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மாறாக அவர் புகலிடம் கோரி விண்ணப்பிக்கவில்லை என்றும் அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் சிங்கப்பூர் பொதுவாக புகலிடக் கோரிக்கைகளை அங்கீகரிப்பதில்லை என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.