Connect with us

Uncategorized

அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கை

Published

on

தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு நீண்டகால தீர்வுகளை வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலைக்கு பாராளுமன்றம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், எந்தவொரு அரசியல் கட்சியின் முன்னேற்றத்திற்காகவும் அல்ல என்றும், மாறாக மக்களின் முன்னேற்றத்திற்காகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வை வழங்குவதற்கு தற்போதுள்ள அரசோ அல்லது அரசியலமைப்பு ரீதியாக நியமிக்கப்படும் புதிய அரசோ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.