Connect with us

உலகம்

பிலிப்பைன்சில் கனமழை:  வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published

on

பிலிப்பைன்சில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் நூற்றுக்கணக்காணோர் காயமடைந்துள்ளனர்.

பலர் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியுள்ளதால் அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் கடலோர காவல்படை, காவல்துறை மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் ராணுவமும் இணைந்துள்ளது.

ஆனாலும் மோசமான வானிலை காரணமாக மீட்புப்பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

கனமழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவால் இதுவரை 17,000 க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

பிலிப்பைன்சில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 புயல்களால் தாக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.