Connect with us

உலகம்

உக்ரைனில் ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை

Published

on

உக்ரைனில் உள்ள ரஷ்ய சார்பு பிராந்தியங்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். 

மேலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் குறைவாக மதிப்பிடும் தொடர்ச்சியான ரஷ்ய முயற்சிகள் தொடர்பாக சில நபர்களின் சொத்துக்களைத் தடுப்பது மற்றும் சில பரிவர்த்தனைகளைத் தடைசெய்தல் என்ற நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார்.

இதன்படி உக்ரைனில் இரண்டு ரஷ்ய ஆதரவு பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் நிதியுதவி மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் இந்த உத்தரவு “உக்ரைனின் அந்த பகுதிகளில் செயல்படத் தீர்மானிக்கப்படும் எந்தவொரு நபருக்கும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அதிகாரத்தை வழங்கும் என்று வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென்சாகி தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யா, உக்ரைனை ஆக்கிரமித்தால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக டுனெட்ஸ்க் மற்றும் லுகன்ஸ்க் மாகாணங்களை “சுதந்திரமானவை” என்று அங்கீகரிக்கும் ரஷ்ய அதிபர் புதினின் முடிவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி ஜே பிளிங்கன் தெரிவித்திருந்தார்.