கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, காலிமுகத்திடல் போராட்டக் களத்திற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், இன்றைய நாள் மிகவும் மோசமானது எனவும், எமது நாட்டின் போக்கை மாற்றியமைக்க வேண்டுமெனவும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை,...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையினைத் தொடர்ந்து அவர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார்.
நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடன் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்...
அரசியல் இலாபங்களுக்காக நாட்டை அராஜகமாக்க விரும்பவில்லை என அவர் இன்று (09) தனது விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்....
எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கு வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் நுகர்வோர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிவாயு கையிருப்பு கிடைக்கும் வரை நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதி குறித்து தீர்மானிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் இன்று (09) நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10.00 மணிக்கு கட்சித் தலைமைக்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 72 லட்சத்து 6 ஆயிரத்து 379 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 கோடியே 90 லட்சத்து 79 ஆயிரத்து 716 பேர் சிகிச்சை...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி தாம் நடத்தும் கலந்துரையாடலின் அடிப்படையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (08) காலை இலங்கை...
நாட்டின் தற்போதைய பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையுடன் கூடிய சூழலில் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் நிர்வகிக்க உதவுமாறு முதலில் நாட்டின் அனைத்து பிரஜைகளிடமும் பாதுகாப்பு அமைச்சு அன்புடன் கேட்டுக்கொள்கிறது. ஜனநாயக கட்டமைப்பிற்குள் அமைதியான முறையில் தமது...
லங்கா IOC நிறுவனம் எரிப்பொருட்களின் விலைகளை அதிகரித்தள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையம் இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தள்ளார். விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...