Connect with us

உலகம்

அமெரிக்காவில் – சூறாவளி பலியானோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

Published

on

அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ள கென்டகி மாகாணத்தில் ஏற்பட்ட சூறாவளிக் காரணமாக இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுமார் 200 மைல் தூரத்திற்கு சுழன்று அடித்த காற்று பல்வேறு பகுதிகளில் பலத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளதாக கென்டகி மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என ஆளுநர் கூறியுள்ளார்.

இந்த சக்திவாய்ந்த சூறாவளி தாக்குதல்களுக்கு அர்கன்சாஸ், இல்லினாய்ஸ், கென்டகி, மிசோரி மற்றும் டென்னஸ்சி ஆகிய 5 மாகாணங்கள் பெரும் பாதிப்படைந்துள்ளன.

இந்த நிலையில் கென்டகி மாகாண வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் மோசமான சுழல் காற்று இது என அங்குள்ள ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *