Connect with us

Sports

அசைக்க முடியாத நிலையில் பாகிஸ்தான்

Published

on

T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

நேற்றைய 31 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான்-நமிபியா அணிகள் மோதின இதில் 45 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று, நடப்பு T20 உலக கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணி முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் , நமிபியா ஆகிய அணிகளை வீழ்த்தி, தொடர் வெற்றி பெற்று நடப்பு T20 உலக கிண்ண தொடரில் பலம் வாய்ந்த அணியாக பாகிஸ்தான் திகழ்கிறது.

இதேவேளை இன்று மாலை 3.30க்கு நியூசிலாந்து – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெறவுள்ளது.

இன்றைய இரண்டாவது போட்டியில் இந்திய – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.