Connect with us

உலகம்

தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் – ஐ.நா

Published

on

பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமல் இருக்க சர்வதேச தலையீடு அவசியம் என ஐ.நா. பொதுச் செயலாளர் என்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐ.நா சபையில் நேற்று (16) இடம்பெற்ற ஆப்கான் நிலைமை குறித்த கலந்துரையாடலில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஆகவே தலிபான்கள் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.

‘ஆப்கானிஸ்தான் மக்கள் பாதுகாக்கப்படவேண்டும். ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தான் மக்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்’ என்றும் ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.