Connect with us

உலகம்

சீனாவில் பலத்த மழை: இதுவரை 21 பேர் பலி

Published

on

சீனாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் பலத்த மழைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது தெரியவந்துள்ளது.

கடும் மழை பெய்து வரும் ஹூபெய் உள்ளிட்ட 5 மாகாணங்களில் சிவப்பு எச்சரிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்து வருகிறது.

நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில் பலத்த மழை பெய்தது.

ஹூபெய் மாகாணத்தில் நேற்றும், இன்றும் 503 மி.மீ. மழை பெய்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இதனால் அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுமார் 4 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

8 ஆயிரம் பேர் ஆபத்தான பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை காரணமாக 21 பேர் பலியாகி உள்ளனர்.

4 பேர் மாயமாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

ன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக சீனாவில் பெய்து வரும் பலத்த மழைக்கு 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.