Connect with us

உள்நாட்டு செய்தி

தனிமைப்படுத்தப்படும் பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க அனுமதி

Published

on

மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டாலும் அங்குள்ள அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் திறக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அந்த பகுதிகளில் அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அதிகளவான நிறுவனங்கள் காணப்படுவதனை கருத்தில் கொண்டு இந்த தீர்மானத்தை எடுத்தாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இன்று (15) காலை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த போதே இராணுவத் தளபதி இதனை தெரிவித்தார்.

நாளை (16) காலை 5 மணி முதல் மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ஆகிய இடங்கள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *