Connect with us

உலகம்

2024 பொது தேர்தலில் போட்டியிடும் இம்ரான் கான்

Published

on

 

பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி பொது தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் தனது சொந்த ஊரான மியான்வாலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக ஊழல் வழக்கு மற்றும் அரச இரகசியங்களை கசியவிட்டது உட்பட இம்ரான் கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. இவர் மீதான ஊழல் வழக்கு நிரூபணமானதை அடுத்து இம்ரான் கான் கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அரச இரகசியங்களை கசியவிட்ட வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அதன் படி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *