Connect with us

உலகம்

காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்…! வெளியேறும் மக்கள்

Published

on

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் எச்சரிக்கை காரணமாக காசாவின் வடக்கே உள்ள மக்கள் பெருமளவில் தெற்கு நோக்கி தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா.வின் மனிதாபிமான அமைப்பான OCHA வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இத் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் இன்று வரை இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மிகவும் அதிகரித்துள்ளதுடன் வியாழக்கிழமை இரவு 11 மணியளவு நிலவரத்தின்படி 4,23,378 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.இவர்களில் 64 சதவீதம் பேர் ஐ.நா.வின் பலஸ்தீன அகதிகள் ஆதரவு அமைப்புகளின் பாதுகாப்பில் உள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் உயிருக்கு அஞ்சி 1,53,000 பேர் காசாவுக்குள்ளேயே வேறு பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பலத்த உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தி உள்ள காஸா பகுதியில் உள்ள வெளிநாட்டவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது தொடர்பில் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த 7 ஆம் திகதி நடத்திய திடீர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காஸா மீது தாக்குதலை நடத்தி வருகிறது.

யுத்தத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிந்துள்ளந்துள்ளதுடன் உயிரிழப்பு அதிகரித்து செல்கின்றது.இந்நிலையில், காஸாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.