Connect with us

உலகம்

நியூசிலாந்தில் பொதுதேர்தலில்களமிறங்கும் இலங்கை தமிழர்

Published

on

நியூசிலாந்தில் நாளை நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் இலங்கை தமிழர் ஒருவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.பொதுத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கை யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளானந்தம் போட்டியிடவுள்ளார்.

நியூசிலாந்தில் பொதுத் தேர்தல் நாளை சனிக்கிழமை (14.10.2023) நடைபெறவுள்ளது.

யாழ்ப்பாண தமிழர்வேட்பாளரான செந்தூரன் அருளானந்தம் இங்கிலாந்து, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் பாரிய கட்டுமான திட்டங்களில் ஆலோசகராக பணியாற்றி உள்ளார்.அத்துடன், நியூசிலாந்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.இவர், யாழ். பரியோவான் (St.John’s College) மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.கடும் போட்டிமேலும், இந்த தேர்தலில் நியூசிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.இந்த இரண்டு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புக்கள் மிகவும் குறைவு என்று அந்நாட்டில் வெளியான கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *