Connect with us

உலகம்

இலங்கையிடம் சீனா விடுத்துள்ள கோரிக்கை

Published

on

இலங்கையில் தமது ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 6 கப்பலை (Shi Yan 6) நிறுத்துவதற்குச் சீனா அனுமதி கோரியுள்ளதாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பிரியங்க விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இருப்பினும் ஷி யான் 6 கப்பல் வருகைக்கான திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும் பிரியங்க விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு, கண்காணிப்பில் நிபுணத்துவம் பெற்ற யுவான் வாங் 5 என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல், அம்பாந்தோட்டைக்கு வந்தபோது, இந்தியா தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது.