Connect with us

Sports

இலங்கை உட்பட ஒருநாள் உலகக் கிண்ணத்தின் 9 போட்டிகளில் திடீர் மாற்றம்…!

Published

on

ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 09 போட்டிகள் திடீரென திருத்தப்பட்டுள்ளன.

அது இந்தியாவின் வேண்டுகோளின் பேரிலேயே இவ்வாறு திருத்தப்பட்டுள்ளன.

திருத்தப்பட்ட போட்டிகளில் இலங்கை பாகிஸ்தான் போட்டியும் அடங்கும்.

இதுதவிர உலகமே எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் திகதியும் மாறியுள்ளது.

மதம் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய – பாகிஸ்தான் போட்டியை மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முதலில் முடிவு செய்தது.

ஆனால் பாகிஸ்தானின் மற்ற அணிகளுடனான போட்டிகளின் திகதி மாற்றத்தின் அடிப்படையில், அவர்களும் தங்கள் போட்டிகளை மாற்ற கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கு 09 போட்டிகளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய சட்டத்திருத்தத்தின்படி, முன்னதாக ஒக்டோபர் 15-ம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி இப்போது ஒக்டோபர் 14-ம் திகதி நடைபெறும்.

இலங்கை பாகிஸ்தான் போட்டி ஒக்டோபர் 10ம் திகதி நடைபெற உள்ளது.

முன்னதாக, போட்டி ஒக்டோபர் 12-ம் திகதி நடைபெறுவதாக இருந்தது.

இந்தியாவின் தேவை கருதி, உலகக் கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாதம் 25 நாட்களே உள்ள நிலையில்,

ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மாற்றப்படுகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *