Connect with us

Uncategorized

நீரில் முழ்கி மாணவி மரணம், ஆசிரியை கைது

Published

on

வலவை கங்கையில் நீராட சென்றபோது நீரில் முழ்கி உயிரிழந்த 16 வயதான மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதனால் பலாங்கொட கல்தொட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வளவை ஆற்றில் நீராட சென்ற கல்தொட்ட பகுதியை சேர்ந்த பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

குறித்த ஆசிரியை பாடசாலையின் அதிபரிடமோ அல்லது வலய கல்விப் பணிப்பாளரிடமோ எவ்வித அனுமதியினையும் பெறாமல் குறித்த மாணவர்கள் இவ்வாறு வளவை கங்கைக்கு நீராட அழைத்துச் சென்றுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதற்கமைய குறித்த ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.