Connect with us

உலகம்

மியான்மரில் இராணுவ புரட்சி – ஆங் சான் சூகி சிறைபிடிப்பு

Published

on

மியான்மரில் இராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூகி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மியான்மாரில் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது.

மொத்தமுள்ள 642 தொகுதிகளுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90 க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக அந்த நாட்டு தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்த நிலையில் ஆங் சான் சூகி இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆங் சான் சூகி கூறுகையில், ‘சட்டத்தின்படி செயற்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்’ என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *