Connect with us

உலகம்

சேர்பியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 08 பேர் உயிரிழப்பு

Published

on

 Serbiaவின் தலைநகரில் அடையாளந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.21 வயதுடைய நபர் ஒருவரினாலே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.துப்பாக்கிதாரி தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.Serbiaவில் இந்த வாரம் பதிவாகிய 02ஆவது துப்பாக்கிச்சூட்டு  சம்பவம் இதுவாகும்.முன்னதாக கடந்த புதன்கிழமை 13 வயது சிறுவனினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.மேலும் 2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகும் முதல் சந்தர்ப்பம் இதுவாகுமென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *