Connect with us

வானிலை

நில அதிர்வு அளவீட்டு கருவிகள் பொருத்தப்படல் வேண்டும் – பேராசிரியர் அதுல சேனாரத்ன

Published

on

கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டுமென புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறுகிறார். தற்போது இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தோன்றுவதால், நில அதிர்வுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், நிலநடுக்கமானிகளை நிறுவுவது மட்டுமல்லாமல், இந்த நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் பற்றிய தரவுகளையும் சேகரிக்கத் தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.நாட்டில் பல இடங்களில் அதிர்வு மீற்றர்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும், கொழும்பு மற்றும் அண்மித்த பகுதிகளில் அதிர்வு மீற்றர்கள் பொருத்தப்படவில்லை என பேராசிரியர் சுட்டிக்காட்டினார்.1966 ஆம் ஆண்டு ‘ஹண்டர் சர்வேயர் நிறுவனம்’ இலங்கை அமைவிடத்தின் ஈர்ப்பு விசையை வரைபடமாக்கிய போது, ​​கொழும்பில் இருந்து நாட்டின் உள்பகுதி வரை அசாதாரண குணாதிசயங்களைக் கொண்ட கோடு ஒன்று அடையாளம் காணப்பட்டதாகவும், அது என்ன என்பதை செயற்கைக்கோள்கள் அடையாளம் காணவில்லை என்றும் சேனாரத்ன கூறியுள்ளார் . மேலும் இதுபோன்ற விஷயங்களை மையமாக வைத்து ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றார்.