Connect with us

உலகம்

ஈரானில் பாடசாலை  மாணவிகளை இலக்குவைத்து  விஷ வாயு  தாக்குதல்

Published

on

ஈரானில்  பாடசாலை  மாணவிகளை இலக்குவைத்து  விஷ வாயு  தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச  ஊடகங்கள்  தெரிவிக்கின்றனபாடசாலை  மாணவிகள் மீதான இந்த  தாக்குதல்கள் குறித்து விசேட  குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக  ஈரான்  அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்பெண்களின் உரிமைகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும்  ஒரு நாடாகவே ஈரான் இஸ்லாமிய குடியரசு   அறியப்படுகிறது.அண்மையில்  ஈரானில் முன்னெடுக்கப்பட்ட  போராட்டத்தில்   பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து  கடந்த சில மாதங்களாக ஈரானில் பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது.இதேவேளை கடந்த  ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஈரானில் பாடசாலை  மாணவிகள் 700 பேர் விஷவாயு தாக்குதலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக   சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனஎவ்வாறாயினும் மாணவிகள் பாடசாலைக்கு  செல்வதை தடுக்கும் வகையிலும்  பாடசாலைகளை  மூடும் நோக்கில் இவ்வாறான செயல்கள் இடம்பெற்றிருக்கலாம்  என அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *