Connect with us

Sports

இன்று முதல் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்!

Published

on

ஐசிசியின் 8 ஆவது மகளிா் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
முதல் நாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா – இலங்கை அணிகள் சந்திக்கின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் 12 ஆம் திகதி மோதுகிறது.
இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள், தலா 5 வீதம் 2 குரூப்-களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் 1-இல் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், நியூஸிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை அணிகளும், குரூப் 2-இல் இங்கிலாந்து, இந்தியா, அயா்லாந்து, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
இதுவரையிலான 7 எடிஷன்களில் 5 முறை கிண்ணத்தை வென்று ஆதிக்கம் செலுத்தும் அவுஸ்திரேலியா, தற்போது 6 ஆவது முறையாக கிண்ணத்தை வெல்லும் முனைப்புடன் வருகிறது.
கடந்த எடிஷனில் (2020) இதே அவுஸ்திரேலியாவிடம் இறுதிச்சுற்றில் தோற்று வாகை சூடும் வாய்ப்பை இழந்த இந்தியா, மீண்டும் முதல் கிண்ணத்திற்கான கனவுடன் இந்த எடிஷனில் களம் காண்கிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *